மனிதர்களாகிய நம்மில் யார் சிறந்தவர் என்றால் மரணத்திற்கு முன் தன்னை முழுமையாக அந்த மறுமை வாழ்க்கைக்கு தயார் செய்துக் கொள்பவர் தான். தயார் செய்வது என்றால் என்ன என்ன செயல்களை செய்தால் சுவனம் புகமுடியும் என்று தெரிந்துவைத்து அதை செய்வது.பாவங்களை விட்டும் அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவது இவை தான்.நாம் அன்றாடம் செய்யும் என்ன என்ன விசயங்களில் பாவமன்னிப்பு உள்ளது என்று சற்று பாப்போம் இன்ஷா அல்லாஹ்.