பச்சிளம் குழந்தைகள் முதல் சிறியவர்கள் வரை,இளைஞர்கள் முதல் இளைஞ்சிகள் வரை பெரியவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு சமுதாயத்தின் அத்தனை வகுப்பினரும் மிக மிக திரளாக கலந்துக் கொள்ளப்பட்ட கூட்டம் தான் சமீபத்தில் TNTJ வினர் சார்பில் நடந்த சிறை நிரப்பும் ஆர்ப்பாட்டம்.தமிழக வரலாற்றில் இப்படி ஒரு உணர்ச்சியும்,உணர்வு பூர்வமான ஆர்பாட்டம் நடைபெறுவது மிக மிக அறிது,ஆனால் அப்படிபட்ட ஆர்பாட்டம் தான் இந்த சிறை நிரப்பும் போராட்டம்.தாங்கள் வேண்டும் என்றே பலி வாங்கப்படுகிறோம், நசுக்கப்படுகிறோம் என்ற முஸ்லிம்களுடைய உணர்வின் உந்துதலே அக்கூட்டத்தின் வெளிபாடு.